வவுனியா குருமண்காடு சந்தியில் இளம் யுவதி ஒருவரின் தங்கச் சங்கிலியை நபர் ஒருவர் அறுத்துச் செல்ல முற்பட்ட சம்பவம் இன்று மாலை 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
வவுனியா குருமண்காடு சந்தியில் சனநடமாட்டம் அதிகமுள்ள இடத்தில் வீதியால் நடந்து சென்றுகொண்டிருந்த இளம் யுவதியொருவர் அணிந்திருந்த தங்கச் சங்கிலியினை நபர் ஒருவர் அறுத்து எடுத்ததுடன் சம்பவ இடத்தை விட்டு தப்பியோட முற்பட்டுள்ளார்.
இதனால் அதிர்ச்சியுற்ற யுவதி இட்ட சத்தத்தினால் அங்கிருந்த பொதுமக்கள் ஒன்றுகூடி திருடனை மடக்கிப்பித்ததுடன் அவரை நையப்புடைத்தனர்.
இதனையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் பொதுமக்களிடமிருந்து திருடனை மீட்டு கைதுசெய்து அழைத்துச் சென்றுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
(சந்தோஷ்)