தபால் தொழிற்சங்கங்கள் சில 24 மணித்தியாலங்கள் சுகயீன விடுமுறை போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். நேற்று நள்ளிரவு முதல் இந்த பணிப்பகிஸ்கரிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியின் இணை ஏற்பாட்டாளர் சிந்தக பண்டார தெரிவித்துள்ளார்.
சேவையாளர்களை இணைத்துக் கொள்வது, பதவி உயர்வு உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
இதன்படி இன்று காலை முதல் தபால் தலைமையகத்தின் முன்னால் சத்தியாக்கிரகப் போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளதாக சிந்தக பண்டார மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.