கார்கள் நேருக்கு நேர் மோதல் நீதிபதி உள்பட 6 பேர் பலியான சோகம்…!

836

judge-deathகரூர் அருகே இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் நீதிபதி உள்பட 6 பேர் உயிரிழந்தனர்.சேலம் மாவட்டம் கூடுதல் உரிமையியல் நீதிமன்ற நீதிபதி பிரகாஷ் மற்றும் அவரது நண்பர் மருத்துவர் பிரதீப் குமாரும் மதுரைக்கு காரில் சென்று கொண்டிருந்தனர். அரவகுறிச்சியை அடுத்த புங்கம்பாடி பிரிவு சாலையில் சென்ற போது காரின் டயர் வெடித்து சாலை தடுப்பை உடைப்பை உடைத்து சென்று எதிரே, வேடசந்தூரில் இருந்து கொடுமுடிக்கு சென்ற கார் மீது வேமாக மோதியது.

இதில், நீதிபதி பிரகாஷ் உள்பட 6 பேர் பலியாகினர். நீதிபதியின் காரை ஓட்டி வந்த மருத்துவர் பிரதீப்குமார் உள்பட 5 பேர் படுகாயங்களுடன் கரூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்தில் உயிரிழந்த மற்ற 3 பெண்கள் ஒரு சிறுவன் உள்ளிட்ட 5 பேர் வேடசந்தூரை அடுத்த கேதைஅரும்பு என்ற இடத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. இந்த விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.