ஜேர்மனியில் வங்கியை வெடி வைத்து தகர்த்து கொள்ளையிட்டு சென்ற கும்பலால் அங்கிருந்த லட்சக்கணக்கான யூரோக்கள் சேதமடைந்துள்ளது.மேற்கு ஜேர்மனியில் அமைந்துள்ள ஒரு வங்கியை கொள்ளையிடும் நோக்கில் அங்கிருந்த பணம் வைக்கப்பட்டிருந்த இயந்திரங்களுக்கு கொள்ளை கும்பல் வெடி வைத்து தகர்த்துள்ளது.
இதனால் அங்கு பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த லட்சக்கணக்கான யூரோக்கள் பயன்படுத்த முடியாமல் சேதமடைந்துள்ளது.இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்திவரும் அதிகாரிகள், பெரும்பாலான கொள்ளையர்கள் நெதர்லாந்து நாட்டில் இருந்தே வருவதாகவும்,
இப்பகுதி இரண்டு நாடுகளுக்கும் இடையேயான எல்லைப்பகுதி எனவும் தெரிவித்துள்ளனர்.வங்கியை தகர்த்த கொள்ளையர்கள் அங்கிருந்து அள்ளிச்சென்ற பணத்தின் கணக்கை வெளியிட விசாரணை அதிகாரிகள் மறுத்துள்ளனர்.
ஆனால் கொள்ளை போன பணம் லட்சக்கணக்கில் இருக்கும் என கருதப்படுகிறது.மேலும் இந்த ஆண்டு இப் பகுதியில் நடைபெறும் 45-வது வங்கி கொள்ளை என தெரிவித்துள்ள அதிகாரிகள், ஒட்டு மொத்த ஜேர்மனியில் இதுபோன்று 63 கொள்ளை சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
வங்கி கொள்ளையர்களை பிடிகூடும் பணியில் 21 பொலிஸ் வாகனங்கள் பயன்படுத்தி வருவதாக கூறும் விசாரணை அதிகாரிகள், கொள்ளையர்களை விரைவில் கைது செய்வதாகவும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.