நேற்றைய தினம் (12.11.2015) வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் தொழில்நுட்ப ஆய்வு கூட திறப்பு விழா மற்றும் பரிசளிப்பு விழா நடைபெற்றது.
1000 பாடசாலை திட்டத்தின் கீழ் 1001 ஆவது பாடசாலையாக இப் பாடசாலை தெரிவு செய்யப்பட்டு நவீன வசதிகளுடன் கூடிய தொழில்நுட்ப ஆய்வுகூடம் திறந்து வைக்கப்பட்டது.
அத்துடன் கதிராளி நூல் வெளியீடும், பரிசளிப்பு விழாவும் சிறப்பாக நடைபெற்றது
இந் நிகழ்வில் கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்னன் மற்றும் வடமாகாண சபை உறுப்பினர் இ.இந்திரராசா, எம்.பி.நடராஜ் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இ.இரவீந்திரன், வவுனியா தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளர், அதிபர், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.








