அடைக்கலநாதன் எம்.பி நவம்பரில் சாகும் வரை உண்ணாவிரதம் – வவுனியாவில் சுவரொட்டிகள் (படங்கள்)..!

498

தேசிய பிரச்சினைக்கு அரசாங்கத்தினால் அடுத்த வருடத்துக்குள் தீர்வு முன்வைக்கப்படாவிடின் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டமொன்றை மேற்கொள்ளப்போவதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் சிலதினங்களுக்கு முன்னர் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில் இப்போராட்டத்திற்கு ஆதரவு திரட்டும் முகமாக டெலோ அமைப்பினரால் நாடுமுழுவது சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு வருகின்றன.

இதேவேளை இன்று மாலை வவுனியாவின் பல பகுதிகளிலும் இச்சுவரொட்டிகள் ஓட்டப்படுவதை காணக்கூடியதாக இருந்தது.

 

vavuniya1 vavuniya2 vavuniya3