மழை தொடரலாம் : அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை!!

290

Malai

காற்று மற்றும் மழையுடன் கூடிய காலநிலை தொடர்ந்தும் நீடிக்கலாம் என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

இதன்படி வடக்கு, கிழக்கு மற்றும் தெற்கு கடற்பகுதிகளில் மீன்பிடி மற்றும் கடற்தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் அவதானத்துடன் இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதேவேளை மழையுடன் கூடிய காலநிலையால் சில மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் 575 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதோடு எட்டு முகாம்களில் 350 பேர் வரை தங்கவைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.

மேலும் யாழில் 2000க்கும் அதிகமானோர் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ளதோடு, கிளிநொச்சி மாவட்டத்தில் 811 குடும்பங்கள் பாதிக்கப்பட்ட நிலையில் 209 பேர் வரை பாதுகாப்பு மத்திய நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் கம்பஹாவில் 1251 குடும்பங்களும் புத்தளத்தில் 2073 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.