
வவுனியா – இரட்டைப்பெரியகுளம் பகுதியில் 10 கிலோ கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சந்தேக நபர் பயணித்த மோட்டார் வாகனத்தை பொலிஸார் சோதனையிட்ட போது மோட்டார் வாகனத்தில் இருந்து 10 கிலோகிராம் கேரள கஞ்சாவை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





