ஆறு மாதங்களில் நிறைவேற்று அதிகாரத்துடன் பாராளுமன்றம்!!

442

Parliament_3_1

அடுத்த ஆறு­மாத காலத்­தினுள் நாட்டில் நிறை­வேற்று அதி­காரம் கொண்ட பாரா­ளு­மன்ற முறை­மையை அமுல்­ப­டுத்­தி­விட முடியும்.அதற்­காக நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி முறை­மை­யினை முழு­மை­யாக நீக்­குதல் மற்றும் தேர்தல் முறைமை மாற்றம் ஆகி­ய­வற்­றுக்­கான அர­சி­ய­ல­மைப்பு திருத்தம் தொடர்பில் ஆராய்­வ­தற்­காக பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மையில் அமைச்­ச­ரவை உப­கு­ழு­வொன்று நிய­மிக்­கப்­பட்­டுள்­ளது என்று அர­சாங்கம் அறி­வித்­துள்­ளது.

தலை­மையில் கூடும் உப­குழு கூட்­டத்தில் புதிய அர­சியல் அமைப்பை உரு­வாக்­கு­வது தொடர்பில் ஆரா­யப்­படும். அதேபோல் அடுத்த ஆண்டு ஜூன் மாத­ம­ளவில் இந்த தீர்­மா­னங்­களை எடுக்க முடியும். அடுத்த ஆறு­மாத காலத்­தினுள் இந்த விவ­கா­ரங்கள் தொடர்பில் முழு­மை­யான கார­ணங்­களை ஆராய்ந்து மீண்டும் அமைச்­ச­ர­வையில் முழு­மை­யான அறிக்­கையை சமர்ப்­பிக்க வேண்டும் எனவும் அர­சாங்கம் அறி­வித்­துள்­ளது.

அர­சாங்க தகவல் திணைக்­க­ளத்தில் நேற்று நடை­பெற்ற வாராந்த அமைச்­ச­ரவை தீர்­மா­னங்­களை அறி­விக்கும் செய்­தி­யாளர் சந்­திப்பின் போதே இணை ஊடகப் பேச்­சா­ளரும் ஊட­கத்­துறை அமைச்­ச­ரு­மான கயந்த கரு­ணா­தி­லக மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் கூறு­கையில்,

நிறை­வேற்று ஜனா­தி­பதி முறை­மையில் மாற்­றத்தை ஏற்­ப­டுத்தி பார­ளு­மன்­ற­தி­றக்கும், அமைச்­ச­ர­வைக்கும் அதி­கா­ரங்­களை வழங்­கு­வ­தாக கடந்த காலத்தில் பலர் வாக்­கு­று­தி­களை வழங்­கி­யி­ருந்­தனர். எனினும் தமது ஆட்­சிக்­கா­லத்தில் அவ்­வா­றான எந்­த­வொரு நட­வ­டிக்­கை­க­ளையும் எவரும் முன்­னெ­டுக்­க­வில்லை.

கடந்த ஜனா­தி­பதித் தேர்­தலின் போது பொது­வேட்­பா­ள­ராக கள­மி­றங்­கிய மைத்­தி­ரி­பால சிறி­சேன தனது தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் தெரி­வித்த கொள்கை பிர­க­ட­னத்தின் படி 19ஆம் திருத்தச் சட்­டத்­துக்கு அமைய நிறை­வேற்று ஜனா­தி­பதி அதி­கா­ரங்­களை குறைப்­ப­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டது. அதேபோல் நூறு நாட்கள் அர­சாங்­கத்­திலும் இந்த முயற்­சிகள் கடு­மை­யாக முன்­னெ­டுக்­கப்­பட்­டது.

எனினும் கடந்த காலத்தில் அந்த முயற்­சிகள் கைவி­டப்­பட்­ட­தாக ஒரு­சிலர் விமர்­சித்­தனர். அதேபோல் இந்த அதி­கார நீக்கம் தொடர்பில் இழுத்­த­டிப்­பு­களை மேற்­கொள்­வ­தா­கவும் தெரி­வித்­தனர். எனினும் இந்த திருத்­தத்தை மேற்­கொள்ள முடி­யாமல் போன­மைக்­கான காரணம் என்­ன­வெனில் இந்த திருத்­தத்தை மேற்­கொள்­வ­தாயின் பொது மக்கள் வாக்­கெ­டுப்பு அவ­சியம் என உயர் நீதி­மன்­றத்தின் தீர்ப்பு ஒன்று இருந்­தது.

ஆகவே இந்த விடயம் தொடர்பில் ஸ்திர­மான தீர்­மானம் ஒன்றை மேற்­கொள்ளும் வகையில் அர­சியல் குழுக்கள் மற்றும் சிவில் அமைப்­பு­களின் கருத்­துக்­களை கவ­னத்­தில்­கொண்டு நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி முறை­மையை நீக்கி பாரா­ளு­மன்­றத்­திற்கு குறித்த அதி­கா­ரங்­களை வழங்­கு­வ­தற்கு தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது. அத­னுடன் சேர்த்து மிகவும் பொருத்­த­மான தேர்தல் முறைமை ஒன்­றையும் அறி­முகம் செய்யும் வகையில் அர­சியல் அமைப்பு திருத்தம் ஒன்றை மேற்­கொள்­வ­தற்கு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வினால் முன்­வைக்­கப்­பட்ட யோச­னை­க­ளுக்கு அமைச்­ச­ர­வையின் அங்­கீ­காரம் வழங்­கப்­பட்­டுள்­ளது.

இந்த யோச­னைக்கு கட்சி பேத­மின்றி அனை­வரும் ஒத்­து­ழைக்க வேண்டும் என்ற எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. அதேபோல் இந்த யோச­னை­களை நடை­மு­றைப்­ப­டுத்தும் வகையில் முன்­னெ­டுக்­கப்­பட வேண்­டிய செயன்­மு­றைகள் மற்றும் முன்­னெ­டுக்க வேண்­டிய அர­சியல் அமைப்பு திருத்தம் தொடர்பில் சிபா­ரி­சு­களை முன்­வைப்­பது குறித்து ஆராய பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மையில் அமைச்­ச­ரவை உப­குழு ஒன்­றையும் நிய­மித்­துள்ளோம். குறித்த கால எல்­லைக்குள் இந்த பிரச்­சி­னைக்கு தீர்வு காணும் வகை­யிலும் அமைச்­ச­ரவை அங்­கீ­காரம் வழங்­கி­யுள்­ளது.

பிர­தமர் தலை­மையில் கூடும் உப­குழு கூட்­டத்தில் புதிய அர­சியல் அமைப்பை உரு­வாக்­கு­வது தொடர்பில் ஆராயப்படும். அதேபோல் அடுத்த ஆண்டு ஜூன் மாதமளவில் இந்த தீர்மானங்களை எடுக்க முடியும். அடுத்த ஆறுமாத காலத்தினுள் இந்த விவகாரங்கள் தொடர்பில் முழுமையான காரணங்களை ஆராய்ந்து மீண்டும் அமைச்சரவையில் முழுமையான அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். அதன்பின்னர் அமைச்சரவையின் அங்கீகாரத்துடன் பாராளுமன்றத்தில் திருத்தத்தை சமர்ப்பித்து நிறைவேற்றிக்கொள்ள முடியும் என்றார்.