வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் 2015ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்குத்தோற்றிய மாணவர்களின் கௌரவிப்பு நிகழ்வுக்குரிய அனுமதியினை மறுத்தமையை எதிர்த்து பெற்றோர்கள் அதிபருக்கு கடிதம் ஒன்றை கையளித்தனர்.
இவ் விடயம் குறித்து மேலும் தெரியவருவதாவது..
2015ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களின் கௌரவிப்பு விழா தொடர்பாக கலந்தாலோசிப்பதற்காக 06.11.2015 அன்று 01.00 மணியளவில் நடாத்தப்பட்ட கலந்துரையாடலில் புலமைப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களின் கௌரவிப்பு நிகழ்வினை நடாத்த அனுமதி மறுத்தமைக்கு பெற்றோர்கள் தமது எதிர்ப்பைத் தெரிவித்தனர்.
இவ்வாறு மறுக்கப்பட்டமையானது மாணவர்களின் உத்வேகத்தினையும் ஆசிரியர்களது ஊக்கத்தினையும் மழுங்கடிப்பது போன்று அமைக்கின்றது. எனவே கடந்த காலங்களில் சிறப்பாக நடைபெற்றது போன்று இவ்வாண்டும் சித்தியெய்திய மாணவர்களையும் கற்பித்த ஆசிரியர்களையும் கௌரவிப்பதற்கான ஒழுங்கமைப்பினை 27.11.2015ம் திகதிக்கு முன்னராக நடாத்துவதற்கான அனுமதியினை கோரியுள்ளனர்.