பல்கேரியாவிலுள்ள கிராமமொன்றில் பச்சை நிறமான பூனையொன்று சுற்றித் திரிந்து பலரையும் திகைக்க வைத்துள்ளது. பல்கேரியாவின் கருங்கடல் பகுதியிலுள்ள வார்னா எனும் கிராம மக்கள் அசாதாரணமான நிறம் கொண்ட இந்த பூனையை பார்த்து வியந்தனர்.
இப்பூனை மீது யாரேனும் பச்சை நிற பெயின்றை பூசியிருக்கலாம் எனவும் சிலர் சந்தேகம் தெரிவித்தனர். இந்நடவடிக்கையில் ஈடுபட்ட நபர்களை கண்டுபிடிப்பதற்காக பேஸ் புக் பக்கமொன்றையும் வார்னா கிராம மக்கள் உருவாக்கினர். ஆனால், இந்த பூ னையின் விசித்திர நிறத்துக்கு குற்றச்செயல் எதுவும் காரணமல்ல எனவும், கராஜ் ஒன்றில் கைவிடப்பட்டிருந்த பச்சை நிற பெயின்ற் மீது இப்பூனை உறங்கியமையே இப்பூனையின் நிறமாற்றத்துக்கு காரணம் என்பதும் கண்டறியப்பட்டது.