கனமழையால் தனித் தீவானது சென்னை : தகவல் தொடர்பு, போக்குவரத்து துண்டிப்பு!!(படங்கள்)

562

கடந்த 24 மணிநேரத்திற்கும் மேலாக பெய்து வரும் கனமழையால் சென்னை மாநகரமே ஸ்தம்பித்துள்ளது. தகவல் தொடர்பு சாதனங்கள், போக்குவரத்து வசதிகள் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளதால், தனித்தீவாக மாறியுள்ளது.

மின்சார வசதியும் நிறுத்தப்பட்டுள்ளதால் எவ்வித உதவியும் கிடைக்காமல் மக்கள் திண்டாடி வருகின்றனர். நகரமே ஸ்தம்பித்துள்ளது. சென்னையில் காலை முதல் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக சாலைகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.

சென்னை கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்திலிருந்து போரூர் செல்லும் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன. போரூர்- வடபழநி சாலையில் 2 அடிக்கு மேல் தண்ணீர் தேங்கியுள்ளது. நுங்கம்பாக்கம், வள்ளுவர்கோட்டம், அமைந்தகரை சாலைகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளது.

கிண்டி வேளச்சேரி பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலை, கிழக்கு கடற்கரை சாலை, பழைய மாமல்லபுரம் சாலையும் வெள்ளம் காரணமாக போக்குவரத்து முடக்கம் ஏற்பட்டுள்ளது.

சென்னை வருவதற்கு பெங்களூர் சாலை மட்டுமே தற்போது பயன்படுத்தப்படுகிறது. இதனால் தென் மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்கள் சென்னை வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

1 2 3 4 5 6 7 8 9 10

11202596_542525805900206_8708454406149539954_n 11222287_542525825900204_1055365786035610421_n 12274491_542551229230997_2984911528925748148_n 12301715_542634152556038_7630772888469369590_n 12308484_542576452561808_3034469851653500012_n 12308497_542576469228473_4374471276274099932_n 12308523_542551205897666_6844958970946274050_n 12310419_542525855900201_852243497165268256_n 12310559_542592805893506_1658864337042143169_n 12310650_542525972566856_5484240019374052740_n 12316319_542580292561424_7820929841856274056_n 12316382_542632179222902_8661683245219625124_n 12342795_542580205894766_7303274778286035424_n