140 பள்ளிச் சிறுவர்களை சுட்டுக் கொன்ற 4 பேருக்கு தூக்குத் தண்டனை!!

301

Pak

பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் நான்கு தீவிரவாதிகளுக்கு நேற்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

இராணுவப் பாடசாலை ஒன்றில் 140 மாணவர்கள் உட்பட 150 பேரை சுட்டுக்கொன்ற 4 தீவிரவாதிகளுக்கே தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

கடந்த 2014ம் ஆண்டு டிசம்பர் மாதம் 16ம் திகதி பெஷாவர் நகரில் உள்ள இராணுவப் பாடசாலையில் புகுந்த தீவிரவாதிகள், கண் மூடித்தனமாக மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் 150க்கும் மேற்பட்ட சிறுவர்கள் உயிரிழந்தனர்.

இந்த சம்பவத்தில் குற்றவாளிகளாக இணங்காணப்பட்ட அப்துல் சலாம், அலி, முஜிபுர் ரகுமான், சபில் ஆகிய 4 பேருக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

இவர்களுக்கு நேற்று புதன்கிழமை காலை தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
தூக்கிலிடப்பட்ட 4 பேரின் உடல்களும் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.