பிரிட்டனில் தாக்குதல் நடத்தப்படும் என ஐஎஸ் தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈராக், சிரியாவின் பகுதிகளை கைப்பற்றி தங்களுக்கென்று தனி தேசத்தை உருவாக்கியுள்ள ஐஎஸ் தீவிரவாதிகள் பல்வேறு கொடூர சம்பவங்களை அரங்கேற்றி வருகின்றனர்.
இவர்களை ஒடுக்க அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. சமீபத்தில் பிரிட்டன் பாராளுமன்றமும் அனுமதி அளிக்கவே, ஐஎஸ் தீவிரவாதிகளை அழித்து வருகிறது. இந்நிலையில் அவர்கள் வீடியோவை வெளியிட்டுள்ளனர்.
அதில், எங்கள் மீது தாக்குதல் நடத்த அனுமதியளித்துள்ள பிரிட்டனுக்கு பாடம் புகட்டும் வகையில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரத்த ஆறு ஓடும் என்றும், பிரான்ஸ் தான் ஆரம்பம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பாரிசில் தாக்குதல் நடத்திய மனித வெடிகுண்டு தீவிரவாதி, பெல்டில் குண்டுகளை கட்டியிருப்பதை காட்டி ‘பிரான்சை அலறவைத்த தியாக சிங்கங்கள்’ என அவன் பாராட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.