வவுனியா சின்னப்புதுக்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள நகரசபை நவீன சந்தை கட்டடத் தொகுதியானது பொதுமக்கள் பாவிக்க முடியாதவகையில் சேறும் சகதியுமாக காணப்படுகிறது.
மேற்படி சந்தை கட்டடத் தொகுதியானது மரக்கறி சந்தை மற்றும் மீன்சந்தை உட்பட பொதுமக்களின் பன்முகத்தேவைக்காக அமைக்கப்பட்டிருந்தபோதிலும் நகரசபையினர் உரிய முறையில் பராமரிக்காத நிலையில் இச்சந்தைத் தொகுதி பொதுமக்களின் பாவனைக்கு உதவாத நிலை காணப்படுவதாகவும் மழைக் காலங்களில் மக்கள் நடமாட முடியாத நிலையே காணப்படுவதாகவும் பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.






