ஷிகர் தவான் பந்து வீச்சில் சந்தேகம்!!

214

Dawan

டெல்லியில் தென்னாபிரிக்காவுக்கு எதிராக கடந்த திங்கட்கிழமை நடந்து முடிந்த 4வது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணியின் முக்கிய வீரரான ஷிகர் தவான் சந்தேகத்திற்குரிய முறையில் பந்து வீசியுள்ளார் என சர்ச்சை எழுந்துள்ளது.

இது பற்றி சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ள அறிவிப்பு ஒன்றில், 30 வயது நிறைந்த அவரது சுழற்பந்து வீச்சில் உள்ள விதிமுறை குறித்து கருத்தில் கொள்ளப்பட்டுள்ளது.

அது குறித்த போட்டி அதிகாரிகளின் அறிக்கை, இந்திய மேலாண்மை குழுவிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிவிப்பில், டெஸ்ட் போட்டிகள், ஒரு நாள் போட்டிகள் மற்றும் சர்வதேச டி20 போட்டிகளில் சந்தேகத்திற்குரிய வகையில் விதிமுறைகளை மீறி தவான் பந்து வீசியுள்ளார் என புகார் தெரிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து அவர் தொடர்ந்து கண்காணிக்கப்படுவார்.

அவர் 14 நாட்களுக்குள் சோதனைக்கு உட்பட வேண்டும். சோதனை முடிவு தெரியும் வரை, இந்த காலங்களில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தவான் பந்து வீசலாம்.

சமீபத்தில் நடந்து முடிந்த டெல்லி டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்சில் தென்னாபிரிக்காவுக்கு எதிராக சுழற்பந்து முறையில் தவான் 3 ஓவர்களை வீசினார். அவர் 3 ஓவர்களில் 9 ஓட்டங்களை விட்டு கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.