துருக்கி கடற்பரப்பில் அகதிகள் படகு ஒன்று மூழ்கியதில் 6 சிறுவர்கள் உட்பட பலர் பலியாகியுள்ளனர். நேற்று முன்தினம் கிரீஸ் நோக்கி புறப்பட்ட அகதிகள் படகு ஒன்றே இவ்வாறு மூழ்கியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் இருந்து 18 சிறுவர்கள் உள்பட 65 பேர் ரப்பர் படகு ஒன்றில் கிரீஸ் நோக்கி புறப்பட்டு சென்றுள்ளனர். இந்நிலையில் படகு திடீரென கடலில் மூழ்கியுள்ளது.
தகவல் கிடைத்ததும் விரைந்து வந்த துருக்கி கடற்படையினர் நீரில் தத்தளித்துக்கொண்டிருந்த 45 பேரை மீட்டுள்ளனர். எனினும் 6 குழந்தைகள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதுடன், அவர்களது உடல்களை கடற்படையினர் மீட்டனர். மற்றவர்களின் கதி என்ன ஆனது என தெரியவில்லை.
கடந்த ஒரு வருடத்தில் இது போன்ற விபத்துகளில் 627 பேர் உயிரிழந்திருப்பதாக சர்வதேச அகதிகளின் அமைப்பு தெரிவித்துள்ளது.