உத்தரபிரதேச மாநிலம் மெயின்புரி மாவட்டத்தைச் சேர்ந்த இளம் பெண் குஷ்பு.இவருக்கு திருமண ஏற்பாடுகள் நடைபெற்றது அவ்ரய்யா பகுதியை சேர்ந்த நில சுவான்தார் ஓம்வீர் சிங் மணமகனாக தேர்ந்து எடுக்கபட்டார்.
குஷ்புவிடம் பெற்றோர்கள் மணமகனுக்கு 60 பிகாஸ் நிலம் இருப்பதாகவும் அவர் பட்டாதாரி எனவும் கூறி இருந்தனர்.
மணமகனின் அவ்ரய்யா வீட்டில் வைத்து திருமணத்திற்கான ஏற்பாடுகள் சிறப்பாக நடைபெற்றது. மணமகன் மணமேடையில் அமர்ந்து மந்திரங்களை கூறி கொண்டு இருந்தார்.
மணமகள் குஷ்பு அலாங்காரம் செய்து மண மேடையில் வந்து அமர்ந்தார். மண மகனுடன் பேசினார். அவரது பேச்சை பார்த்ததும் மணமகளுக்கு திகைப்பு ஏற்பட்டது. அவர் பேசும் போது ஒரு பட்டதாரி பேசுவது போன்று இல்லை இதனால் சந்தேகம் அடைந்த குஷ்பு மணமகனுக்கு ஒரு சிறிய கணக்கை போடுமாறு கூறினார் ஆனால் அதில் மணமகன் தோல்வி அடைந்தார். 69 க்கும் 79 க்கும் உள்ள வித்தியாசம் என்ன என கேட்டார் மணமகன் திரு திரு என முழித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த குஷ்பு திருமண மேட்டையை விட்டு விடுவிடு என இறங்கி நடக்க தொடங்கினார். பெற்றோரிடம் தனக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை என கூறினார்.
பெற்றோர்கள் குஷ்புவை சமாதானம் செய்தனர். மணமகன் படிக்காதவர் எனவே அவரிடம் சில பரீட்சைகள் வைப்பேன் அதற்கு ஒத்து கொண்டால் திருமணம் செய்து கொள்ள தயார் என கூறினார்.
இதை தொடர்ந்து திருமணத்திற்கு வந்தவர்கள் மத்தியில் மணமேடையில் வைத்தே மணமகனிடம் பரீட்சை வைத்தார் தனது மொபைல் போனில் தனது நம்பரை அழுத்தி தனக்கு அழைப்பு விடுக்குமாறு கூறினார் அதிலும் மணமகன் தோல்வி அடைந்தார்.
இதனால் கோபம் அடைந்த குஷ்பு திருமணத்தை நிறுத்தினார். பஞ்சாயத்தார் வந்து மணமகளிடம் சமாதானம் பேசினர் இருந்தும் அது பலன் அளிக்கவில்லை.