வவுனியா சூசைப்பிள்ளையார்குளம் சகாயமாதாபுரம் துர்க்கை அம்மன் ஆலயத்தில் எதிர்வரும் 2016ஆம் ஆண்டிற்கான வாக்கிய பஞ்சாங்க நாட்காட்டி (கலண்டர்) வெளியீடு 11.12.2015 இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.
ஆலயத்தின் குரு வை. சிவசங்கரக்குருக்கள் வெளியிட ஆலயத்தின் தலைவி மனோன்மணி அம்மா அவர்கள் பெற்றுக்கொண்டார்கள். நிகழ்வில் வவுனியா மாவட்ட கலாச்சார உத்தியோகத்தர் நித்தியானந்தன் மற்றும் தர்சினி ஆகியோரும் கிராம சேவை உத்தியோகத்தர் உட்பட ஆலய பரிபாலன சபையினர் கிராமமக்கள் அடியவர்கள் என பலர் கலந்து சிறப்பித்தனர்.