சிம்பாவே அணியுடனான தொடரை கைப்பற்றிய இந்திய அணி..!

363

india

இந்திய சிம்பாவே அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி ஹராரேவில் நடைபெற்றது. இதில் நாணயசுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணித்தலைவர் வீராத் கோலி களத்தடுப்பை தெரிவு செய்தார்.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய சிம்பாவே அணி 46 ஓவரில் 183 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

சிம்பாவே அணி சார்பாக அணித்தலைவர் டெய்லர் 23 ஓட்டங்களையும், மசகாட்சா 38 ஓட்டங்களையும், வில்லியம்ஸ் 45 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக அமித் மிஸ்ரா 4 விக்கட்டுகளை வீழ்த்தினார்.

இலகுவான இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இந்திய அணி சார்பாக ரோகித் ஷர்மா 14 ஓட்டங்களையும் , தவான் 35 ஓட்டங்களையும், அம்பதி ராயுடு 33 ஓட்டங்களையும் கோலி 68 ஓட்டங்களையும், ரெய்னா 28 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

இறுதியில் இந்திய அணி 35.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 187 ஓட்டங்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட தொடரை கைப்பற்றியது மட்டுமன்றி தொடரில் 3-0 என முன்னிலை வகிக்கின்றது.