தீ மிதியின்போது தவறி விழுந்து பெண் மரணம்!!

1087

thee

சென்னையில் கோவில் விழாவின்போது நடந்த பூக்குழி இறங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 45 வயதுப் பெண் தடுமாறி உள்ளே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

சென்னை ஏழு கிணறு வரத அய்யர் தெருவைச் சேர்ந்தவர் ஷகீலா. 45 வயதான இவர் செளகார்ப்பேட்டையில் நடந்த பாஞ்சாலி அம்மன் கோவில் தீ மிதி விழாவில் பங்கேற்றார். அவரு்ம் பூக்குழியில் இறங்கி நடக்க ஆரம்பித்தார்.

அப்போது தடுமாறி நெருப்புக் கிடங்கில் விழுந்து விட்டார். படுகாயமடைந்து துடித்த அவரை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். உடல் முழுவதும் தீக்காயமடைந்த அவர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.