தலைமறைவானதாய் கருதிய நபர் கொலை: 18 ஆண்டுகளாய் மூடி மறைத்த மனைவி!!

257

wife_killed_hus_002

வீட்டை விட்டு வெளியேறியதாய் கருதப்பட்ட நபர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக வெளியான தகவல் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பிரித்தானியாவின் கடலோரப்பகுதியில் அமைந்துள்ள Pontypridd எனும் இடத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தவர் John Sabine.

இவர் கடந்த 1997-ஆம் ஆண்டில் இருந்து வீட்டை விட்டு வெளியேறி தலைமறைவானதாக தகவல்கள் வெளியானது.
John Sabine தலைமறைவானது குறித்து அவரது மனைவி அல்லது குடும்பத்தினர் எவரும் இது நாள் வரை பொலிசாரிடம் புகார் தெரிவிக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இவர்களது குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள தோட்டத்தில் இருந்து புதைக்கப்பட்ட நிலையில் மண்டை ஓடு உள்ளிட்டவைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.இதனையடுத்து இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்ட பொலிசார், Sabaine கொலை செய்யப்பட்டதில் மனைவிக்கும் தொடர்பு இருக்கலாம் என சந்தேகம் எழுப்பியுள்ளனர்.

கடந்த 18 ஆண்டுகளாக கணவர் தொலைந்து போனது குறித்து எந்த புகாரும் தெரிவிக்காததும், வாக்காளர் பட்டியலில் கணவர் உயிருடன் இருப்பதாகவே தெரிவித்து வந்ததும் விசாரணை அதிகாரிகளுக்கு சந்தேகத்தை உறுதிப்படுத்தியுள்ளது. John Sabaine கடுமையாக தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டதை உடற்கூறு நிபுணர்கள் உறுதி செய்துள்ள நிலையில், Sabine குறித்து மேலும் பல தகவல்களை திரட்டும் பணியில் விசாரணை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

ஆனால் Sabaine படுகொலைக்கும் அவரது மனைவிக்கும் எவ்வித தொடர்பும் இருக்க வாய்ப்பு இல்லை என அக்கம்பக்கத்தினர் உறுதிபட தெரிவித்துள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் புற்று நோய் தாக்குதலால் Leigh Sabine காலமானார். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற சோதனையில்தான் அவரது கணவர் கொலை செய்யப்பட்ட விவகாரமும் வெளியானது.