மீண்டும் BCCI தலைவராகிறார் சீனிவாசன்!!

422

Srinivasan

குருநாத் மெய்யப்பன், ராஜ் குந்த்ரா ஆகியோர் மீதான ஆட்ட நிர்ணய குற்றங்களுக்கு ஆதாரமில்லை என்று கூறி விட்டது இந்திய கிரிக்கெட் சபை நியமித்த விசாரணைக் குழு.

இதையடுத்து மீண்டும் தலைவர் பொறுப்புக்குத் திரும்புகிறார் சீனிவாசன். சீனியின் மருமகன் குருநாத் மெய்யப்பன். ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் இணை நிறுவனர் ராஜ் குந்த்ரா. இவர்கள் மீதான சூதாட்டத்தில் தொடர்பு என்ற புகார்கள் குறித்து விசாரிக்க இந்திய கிரிக்கெட் சபையால் நியமிக்கப்பட்ட குழு தற்போது இவர்களுக்கும் அந்த புகார்களுக்கும் தொடர்பு இல்லை என்று கூறி விட்டது.

இந்த நிலையில் விசாரணையில் குருநாத் மெய்யப்பன், ராஜ் குந்த்ரா ஆகியோர் அப்பாவிகள் அவர்களுக்கும் இந்தப் புகார்களுக்கும் தொடர்பு இல்லை என்று தெரிவித்துள்ளதாம். விசாரணை அறிக்கையை ஓகஸ்ட் 2ம் திகதி கூடும் கிரிக்கெட் சபை ஒப்புதல் அளிக்கவுள்ளது. அன்றயை தினமே ஐபிஎல் நிர்வாகக் கூட்டமும் கூடுகிறது.

அறிக்கையில் தனது மருமகன் நல்லவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதால் சீனிவாசன் மீண்டும் தலைவர் பொறுப்பை ஏற்கவுள்ளாராம்.