முல்லைத்தீவு விபத்தில் தீப்பற்றிய மோட்டார் சைக்கிள் : ஒருவர் பரிதாபமாகப் பலி!!(காணொளி)

331

news

முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் நேற்று இரவு 7 மணியளவில் மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியில் நின்ற மாட்டுடன் மோதி தீப்பற்றி விபத்துக்குள்ளாகியதில் அதில் பயணம் செய்த ஒருவர் மரணம் அடைந்ததுடன் மற்றும் ஓருவர் ஆபத்தான நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்தினைத் தொடர்ந்து நீண்ட நேரமாக மோட்டார் சைக்கிள் தீப்பற்றிக் கொண்டிருந்தது. சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் புதுக்கடியிருப்பு 10 ம் வட்டாரத்தை சேர்ந்தவர்கள் எனத் தெரியவருகின்றது

மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு பொலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.