பாகிஸ்தான்- மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான போட்டியின் போது சூதாட்டம் நடந்ததாக புகார் எழுந்துள்ளது.
மேற்கிந்திய தீவுகளுக்கு சென்ற பாகிஸ்தான் அணி 5 ஒருநாள் போட்டிகளில் விளையாடியது.
இதில் 3-2 என்ற கணக்கில் பாகிஸ்தான் அணி மேற்கிந்திய தீவுகள் அணியை வீழ்த்தியது. இந்நிலையில் இப்போட்டிகளில் பெருமளவு சூதாட்டம் நடந்ததாக பிரிட்டனை தலைமையிடமாக கொண்ட கிரிக்கெட் ஊழல் ஒழிப்பு பிரிவு கூறியுள்ளது.
எனவே போட்டிகள் குறித்து விசாரணை நடத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.