தொழில் வாய்ப்பற்ற பட்டதாரிகளின் பிரச்சினைகளுக்கு துரித தீர்வு!! 

474

graduate-job-185912535

தொழில்வாய்ப்பற்ற பட்டதாரிகளின் பிரச்சினைகளுக்க துரித தீர்வை பெற்றுக்கொடுக்க பல கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கொள்கை மற்றும் பொருளாதார விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த 5 ஆம் திகதி பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் தொழில்வாய்ப்பற்ற பட்டதாரிகளின் சங்கத்திற்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடல்களின் பின்னர் எட்டப்பட்ட கொள்கையடிப்படையிலான தீர்மானங்களின் படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறித்த பிரச்சினைக்கு தீர்வை பெறுவதற்காக தேசிய கொள்கை மறறும் பொருளாதார அமைச்சர் நிரோஷன் பெரேராவின் கண்காணிப்பின் கீழ் 4 அமைச்சுகளின் பங்களிப்புடன் குழுவொன்றும் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

அந்த குழு தொழில்வாய்ப்பற்ற பட்டாரிதாரிகளின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக முன்வைத்த பரிந்துரைகள் எதிர்வரும் 28 ஆம் திகதி பிரதமருடன் இடம்பெறவுள்ள சந்திப்பின் போது கவனத்தில் கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது