6 மாத குழந்தையை கற்பழித்து இணைத்தில் புகைப்படம் வெளியிட்ட நபர்: 22 வருடங்கள் சிறை தண்டனை விதித்த நீதிமன்றம்!!

290

child_abuser_003

பிரித்தானியாவில் 6 மாத குழந்தையை கற்பழித்து, அந்த படங்களை இணைத்தில் வெளியிட்ட நபருக்கு 22 வருடங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவின் சூரி(surrey) மாகாணத்தில் உள்ள ஆஸ்(Ash) பகுதியை சேர்ந்தவர் தாமஸ் போலி (Thomas poole).பிறந்து ஆறு மாதமேயான குழந்தையை இவர் கற்பழித்ததாக கூறப்படுகிறது.மேலும் குழந்தையை கற்பழித்த புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவேற்றிய அவர், குழந்தைகளை எப்படி கற்பழிப்பது என்று ஆலோசனைகளையும் வழங்கியுள்ளார்.

இதனை அறிந்து அதிர்ச்சியடைந்த பொலிசார் அவரை கைது செய்து Guildford நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.அப்போது தன்மீதுள்ள 14 குற்றச்சாட்டுகளை அவர் ஒப்புக்கொண்டார்.இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி கிறிஸ்டோபர் கிறிட்ச்லோ கூறியதாவது, இந்த வழக்கு குறித்து யாராவது அறிந்தால் எப்படி ஒருவர் இது போன்ற வக்கிரமான செயலில் ஈடுபட்டிருப்பார் என்று அதிர்ச்சியடையக்கூடும்.

கற்பழித்தது மட்டுமின்றி அது தொடர்பான புகைப்படங்களும் எடுத்துள்ளார்.எனவே, குற்றம் செய்த தாமசுக்கு 22 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படுகிறது என்று கூறி தீர்ப்பளித்தார்.முன்னதாக, குழந்தைகளின் ஆபாச படங்களை இணையத்தில் பதிவேற்றியதாக கடந்த 2008 ஆம் ஆண்டும் அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.