திருடர்களை ரத்தத்தோடு தெருவில் ஓடவிட்ட பெண்மணி!!

282

thief-running-vector-illustration-37762519

ஜேர்மனியில் பெண்மணி ஒருவர் தன்னிடம் கொள்ளையடிக்க வந்த திருடர்களை துணிகரமாக விரட்டியடித்துள்ளார்.ஜேர்மனியை சேர்ந்த 34 வயது பெண்மணி ஒருவர்,காலை 3.45 மணியளவில் Ludigerplatz நகரில் உள்ள ரயில் நிலையத்திலிருந்து நடந்து சென்றுகொண்டிருந்தார்.

அப்போது அவரை பின்தொடர்ந்த இரண்டு ஆண்கள், அவரிடம் இருந்த பணத்தினை தருமாறு அவரை மிரட்டியுள்ளனர், இதற்கு அப்பெண் மறுக்கவே ஒரு நபர் அப்பெண்ணின் முகத்தில் ஒரு குத்துவிடுகிறார்.
இதனால் நிலைகுலைந்த கீழே விழுந்த பெண்மணி, துணிச்சலுடன் எழுந்து அந்த நபரின் மூக்கில் பதிலுக்கு ஒரு குத்துவிட்டுள்ளார்.

இதனால் அந்த நபரின் மூக்கிலிருந்து ரத்தம் சொட்டுகிறது, இதனைப்பார்த்த மற்றொரு நபர், கத்தியை எடுத்து அவரின் கன்னத்தில் கீறிவிடுகிறார் இருப்பினும் அப்பெண் அவர்கள் இருவரோடும் சண்டையிட்டு அவர்களை விரட்டியுள்ளார்.

அந்த இரு திருடர்களும் அச்சத்தோடு அங்கிருந்து தப்பித்து ஓடியுள்ளனர், இதுகுறித்து விசாரணை நடத்தி பொலிசார், சுமார் 20 வயது மதிக்கத்தக்க அந்த திருடர்கள் 170 மற்றும் 180 செமீ உயரம் இருப்பார்கள் என்று தெரியவந்ததையடுத்து இருவரையும் தேடி வருகின்றனர்.