சிம்புவிற்கு அதிரடி தீர்ப்பு, பாடல் வெளியிட்டது அவர் இல்லை- வெளிவந்த உண்மை!!

321

simbu-1

சிம்பு பாடிய பீப் பாடலால் அவர் பெயர், புகழ் அனைத்தும் வீணாகிவிட்டது. இந்நிலையில் இன்று விசாரணைக்கு வந்தது இந்த பீப் பாடல் விவகாரம்.இதில் சிம்புவிற்கு ஜாமீன் வழங்கக்கூடாது என அரசு தரப்பு வழக்கறிஞர் சார்பில் கூறப்பட்டது. இதை தொடர்ந்து நீதிபதி கூறுகையில் சிம்பு ஜனவரி 2ம் தேதி ஆஜராக தேவையில்லை என கூறினார்.

இவை சிம்பு தரப்பிற்கு சந்தோஷம் என்றாலும், பீப் பாடலை பாடிய நடிகர் சிம்புவை கைது செய்ய எந்தவித தடையும் இல்லை என கூறியது அவர் மட்டுமின்றி ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.இதுமட்டுமின்றி இப்பாடலை வெளியிட்டது சிவகார்த்திகேயன் என ஒரு சிலர் கூறினர், அவர் அப்படி செய்யவில்லை என சிம்புவே தன் டுவிட்டர் பக்கத்தில் கூறியிருக்கிறார். தற்போது அந்த பாடலை வெளியிட்ட வேறு நடிகர் யார்? என்பது தான் சமூக வலைத்தளங்களில் பலரின் கேள்வியும்.