இரவு நேரத்தில் பனிச்சறுக்கு விளையாட சென்ற நபர்: மின்கம்பத்தில் மோதி உயிரிழந்த பரிதாபம்!!

276

SNOW-Interview

சுவிட்சர்லாந்து நாட்டில் இரவு நேரத்தில் பனிச்சறுக்கு விளையாட சென்ற நபர் ஒருவர் எதிர்பாராதவிதமாக மின்கம்பத்தில் மோதி உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.சுவிஸின் Saint Gallen மாகாணத்தில் உள்ள Flumserberg என்ற பகுதியில் நேற்று இரவு 7 மணியளவில் 3 பேர் பனிச்சறுக்கு விளையாட சென்றுள்ளனர்.

3 நபர்களும் தாழ்வான பனிப்படலத்தில் சறுக்கிக்கொண்டு Tannenboden என்ற பகுதியை நோக்கி விரைந்து சென்ற முடிவு செய்தனர்.முதலில், இரண்டு நபர்கள் சறுக்கொண்டு சென்றுவிட, மூன்றாவதாக 48 வயதான நபர் ஒருவர் சறுக்கொண்டு வரும்போது எதிர்பாராத விதமாக அங்குள்ள மின்கம்பம் மீது பலமாக மோதியுள்ளார்.

பல நிமிடங்களாக அவர் கீழே வராததால் சந்தேகம் அடைந்த அவரது நண்பர்கள் வந்த வழியே திரும்பி நடந்து சென்றுள்ளனர்.அப்போது, ஓரிடத்தில் மயங்கிய நிலையில் நண்பர் அடிப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனடியாக மீட்பு குழுவினருக்கு தகவல் அளித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள் நபரை தூக்கிக்கொண்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.ஆனால், மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காததால் அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். Flumserberg பகுதியில் அதிக அளவு சுற்றுலாப்பயணிகள் வராத நிலையிலும், 3 வாரங்களுக்கு இந்த பகுதி பொதுமக்களின் உபயோகத்திற்கு திறக்கப்பட்டுள்ள நேரத்தில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.