எகிப்திய ஜனாதிபதி அப்டெல் பட்டாஹ் அல் சிஸியின் புகைப்படத்தை கணினியில் போட்டோஷொப் மென்பொருளைப் பயன்படுத்தி அவர் சிறுவர்களின் சித்திரக் கதைகளில் வரும் கேலிச் சித்திர கதாபாத்திரமான மிக்கி மவுஸின் காதுகளையொத்த காதுகளை அணிந்திருப்பதாக உருமாற்றம் செய்து பேஸ்புக் இணையத்தளத்தில் வெளியிட்ட அந்நாட்டு மாணவர் ஒருவருக்கு 3 வருட சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றமொன்று தீர்ப்பளித்துள்ளது.
சட்டக் கல்லூரி மாணவரான அமர் நொஹான் என்ற 22 வயது இளைஞரே இவ்வாறு சிறைத் தண்டனை விதிப்புக்குள்ளாகியுள்ளார். அவர் மீது ஆட்சியாளரை அவமதித்ததாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.