சஹிட் அப்ரிடி 400 சிக்சர்கள் அடித்து சாதனை!!

380

afridi

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சஹிட் அப்ரிடி சர்வதேச அளவில் 400 சிக்சர்களை அடித்த முதலாவது வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

மேற்கிந்திய தீவுகள் அணிக்கும் பாகிஸ்தான் அணிக்கும் இடையே சனிக்கிழமை T20 போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் 2 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றிபெற்றது. இதில் அப்ரிடி 2 சிக்சர்களை அடித்திருந்தார்.

இதன் மூலம் 400 சிக்சர்களை அடித்த முதலாவது கிரிக்கெட் வீரர் என்ற சாதனை படைத்திருக்கிறார் அவர். 33 வயதாகும் அப்ரிடி, 359 ஒருநாள் போட்டிகளில் 314 சிக்சர்களையும், 27 டெஸ்ட் போட்டிகளில் 52 சிக்சர்களையும் 20 T20ல் 61 சிக்சர்களையும் விளாசியிருக்கிறார்.

1996ம் ஆண்டு கென்யாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 37 பந்துகளில் சதமடித்து சாதனை படைத்தார். அப்ரிடிக்கு அடுத்ததாக 353 சிக்சர்களுடன் 2வது இடத்தில் இருக்கிறார் மேற்கிந்திய தீவுகள் அணியின் கிறிஸ் கெய்ல்.