படத்தை கைவிட்டுவிட்டு நண்பர்களாக பிரிந்த கார்த்தி, ஹரி!!

293

karthi-hari

ஹரி இயக்கத்தில் கார்த்தி நடிப்பதாக இருந்த படம் கைவிடப்பட்டுள்ளது. சிங்கம் 2 படத்தை முடித்த பிறகு ஹரி கார்த்தியை வைத்து அருவா என்ற படத்தை இயக்க உள்ளார் என்று கூறப்பட்டது.

இந்நிலையில் சில தீர்க்க முடியாத பிரச்சனைகளால் படம் கைவிடப்பட்டுள்ளது. ஹரியும், கார்த்தியும் நண்பர்களாக பிரிந்து சென்றனர் என்று கூறப்படுகிறது.

சிங்கம் 2 படத்தை அடுத்து கார்த்தியின் அருவா எப்பொழுது துவங்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. 4 மாதங்களில் ஷூட்டிங் துவங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் படம் கைவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் கார்த்தியின் பிரியாணி படம் வரும் செப்டம்பர் மாதம் ரிலீஸ் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.