
உலகில் வௌிநாட்டவர்களின் வருகை அதி விரைவாக வளர்ச்சியடையும் நகராக கொழும்பு நகர் தெரிவாகியுள்ளது. கடந்த ஆறு வருடங்களில் பெற்றுக்கொள்ளப்பட்ட தரவுகளின் படி, உலக பொருளாதார மன்றம் வௌியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
2015ம் ஆண்டு கொழும்பு நகருக்கு மில்லியனுக்கும் அதிகமான சர்வதேச விருந்தினர்கள் வருகை தந்ததாக, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை இந்தப் பட்டியலில் இரண்டாம் இடத்தை சீனாவின் சென்டு நகர் பெற்றுக் கொண்டுள்ளது.ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் அபுதாபி நகர் மூன்றாம் இடத்தையும் ஐப்பானின் ஒசாக நாகர் நான்காம் இடத்தையும் கைப்பற்றியுள்ளன.





