
மேற்கு வங்க மாநிலத்தில் ராணுவ வீரர்கள் ஓடும் ரயிலில் 14 வயது சிறுமிக்கு மது ஊற்றிக் கொடுத்து பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஹவ்ரா-அமிர்தசரஸ் ரயிலில் கடந்த திங்கள் அன்று பயணித்த தனது மகளை காணவில்லை என சிறுமியின் தந்தை ரயில்வே பொலிசில் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரையடுத்து பொலிசார் அந்த பெண்ணை தேடியுள்ளனர். அப்போது அச்சிறுமியின் கோலத்தை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.பொலிசாரிடம் அந்த பெண் அளித்துள்ள வாக்குமூலத்தில், ரயில் பயணத்தின் போது ஒரு ராணுவ வீரர் தனக்கு வலுக்கட்டாயமாக மது ஊற்றிக் கொடுத்ததாகவும் 2 பேர் தன்னை பலாத்காரத்திற்கு ஆட்படுத்தியதாகவும் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.
இதையடுத்து பொலிசார் மது ஊற்றிக் கொடுத்த ராணுவ வீரரை கைது செய்துள்ளனர்.மேலும், தலைமறைவாகியுள்ள 2 ராணுவ வீரர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.தற்போது பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளார்.





