புதிய முறையல் ஜூனில் உள்ளூராட்சி மன்ற தேர்தல்!!

422

elections_081212

புதிய கலப்பு தேர்தல் முறை­மையில் எதிர்­வரும் 2016 ஆம் ஆண்டு ஜூன் மாதம் உள்­ளூ­ராட்­சி­மன்ற தேர்­தல்கள் நடை­பெறும் என்­ப­தனை உறு­தி­படக் கூறு­கின்றோம் என்று அமைச்­ச­ரவைப் பேச்­சா­ளரும், அமைச்­ச­ரு­மான ராஜித சேனா­ரட்ண தெரி­வித்தார்.அர­சாங்க தகவல் திணைக்­க­ளத்தில் நேற்று நடை­பெற்ற விசேட செய்­தி­யாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து வெளி­யி­டு­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு கூறினார்.

அமைச்சர் மேலும் குறிப்­பி­டு­கையில் 20 ஆவது திருத்த சட்­டத்தின் ஊடாக நாட்டின் தேர்தல் முறை­மையை மாற்­று­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­படும். அதற்கு தேவை­யான வகையில் கலந்­து­ரை­யா­டல்­க­ளையும் பேச்­சு­வார்த்­தை­க­ளையும் நடத்­துவோம். அது­மட்­டு­மன்றி எதிர்­வரும் 2016 ஆம் ஆண்டு ஜூன் மாதம் உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்தல் புதிய கலப்பு தேர்தல் முறைப்­படி நடை­பெறும். விருப்­பு­வாக்­கற்ற உள்­ளூ­ராட்­சி­மன்ற தேர்தல் நடைபெறும். இதன் மூலம் பாரிய மாற்றத்தை நாங்கள் கொண்டுவருவோம் என்றார்.