
வவுனியா புளியங்குளம் விளாத்திக்குளம் பகுதியில் இருந்து இளைஞர் ஒருவரின் சடலம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (03.01.2016) மீட்கப்பட்டு புளியங்குளம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தை சேர்ந்த கவி என்று அழைக்கப்படும் 22 வயதான இளைஞரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பாக புளியங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





