வவுனியா நகரம் ஐக்கியத்தின் குறியீடாக அமைந்துள்ளது : ஜே.வி.பி..!

411

Somawansa

வவுனியா நகரம் ஐக்கியத்தின் குறியீடாக அமைந்துள்ளது என ஜே.வி.பி கட்சி குறிப்பிட்டுள்ளது. தேசிய ஐக்கியத்தின் குறியீடாக வவுனியா நகரம் காணப்படுகின்றது என ஜே.வி.பி.யின் தலைவர் சோமவன்ச அமரசிங்க தெரிவித்துள்ளார்.

வவுனியா நகரில் துண்டுப் பிரசுர விநியோக நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். வவுனியா நகரை ஏனைய பகுதி மக்கள் முன்னுதாரணமாகக் கொள்ள முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சிங்கள, முஸ்லிம் தமிழ் மக்கள் நாட்டின் எந்தவொரு பகுதியிலும் சுதந்திரமாக வாழக்கூடிய பின்னணி உருவாக்கப்பட வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த நாட்டின் எதிர்காலத்தை சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் இளைஞர்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டியது அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார்.