மைனா, கும்கி மற்றும் கயல் படங்களை இயக்கிய பிரபு சாலமன் அடுத்த தனுஷை வைத்து ரயில் என்ற படத்தை எடுத்து முடித்துள்ளார்.இப்படம் ரயிலில் நடக்கும் சம்பவங்களை அடிப்படையாக கொண்ட ஒரு காதல் கதை. முதன்முறையாக தனுஷ் போன்ற ஒரு முன்னணி நடிகருடன் பணியாற்றியது பற்றி இயக்குனர் பிரபு சாலமன் ஒரு வார இதழில் கூறியுள்ளார்.
இந்த படத்தின் கதை எழுதும் போதே தனுஷ் தான் என் மனதில் வந்தார், உடனே அவரை சந்தித்து படத்தின் ஒன் லைன் மட்டுமே நான் சொன்னேன், ஓகே பண்ணலாம் என்றார்.இப்படத்தில் ரயிலில் டீ விற்கும் நபராக வருகிறார் தனுஷ், அவர் அந்த உடையை மாற்றி வரும் போது நான் அசந்து விட்டேன். அன்று நான் தனுஷை பார்க்கவில்லை என் மனதில் உதிர்ந்த பூச்சியப்பனைத்தான் பார்த்தேன் என்று கூறியுள்ளார்.