தமிழ் மக்களின் வாழ்வுடன் பின்னிப்பிணைந்துள்ள தைத் திருநாளாம் தைப் பொங்கல் தினம் நாளைய தினம் (15.01.2016) கொண்டாடப்படவுள்ள நிலையில் வவுனியாவில் பொங்கலுக்கு தேவையான பொங்கல் பானை, கரும்பு, அரிசி, பழவகை, பட்டாசு, புத்தாடைகள் என்பவற்றின் விற்பனை களைகட்டியுள்ளது.
பல்வேறு பிரதேசங்களில் இருந்தும் வியாபாரிகள் வருகைதந்து தமது வர்தக நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர். மக்களும் ஆர்வத்துடன் பொருட்களை கொள்வனவு செய்வதை காணக் கூடியதாகவுள்ளது.






