2015ம் ஆண்டுக்கான உலக கிண்ணத்தை கைப்பற்றுவோம் : டோனி நம்பிக்கை!!

389

dhonicup

2015ம் ஆண்டுக்கான உலக கிண்ண போட்டியில் இந்தியா சிறப்பாக விளையாடி கிண்ணத்தை கைப்பற்றும் என அணித்தலைவர் டோனி நம்பிக்கை தெரிவித்துள்ளார். 2015ம் ஆண்டுக்கான உலக கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து இந்திய அணியின் அணித்தலைவர் டோனி கூறுகையில், உலக கிண்ணத் தொடரை சந்திக்க ஆவலாகவும் ஆர்வமாகவும் உள்ளேன். இந்த போட்டிகளில் இந்தியா சிறப்பாக விளையாடி, கிண்ணத்தை கைப்பற்றும் என்ற நம்பிக்கை உள்ளது.

சமீபத்தில் நடந்த ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண போட்டித் தொடரை இந்தியா வென்ற விதம் அனைவருக்கும் தெரியும். இந்த நம்பிக்கையும் அனுபவங்களும் கிண்ணத்தை வெல்ல பெரும் உதவியாக இருக்கும் என்று தான் நம்புவதாக தெரிவித்துள்ளார்.