பில்லாவைவிட “ஆரம்பம்” விறுவிறுப்பாக இருக்கும் : இயக்குனர் விஷ்ணுவர்தன்!!

382

aarambam-movie

அஜீத், ஆர்யா, நயன்தாரா நடிப்பில் உருவாகியிருக்கும் “ஆரம்பம்” திரைபடத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து திரைக்கு வர தயார் நிலையில் உள்ளது. இதுவரை இப்படம் குறித்து படக்குழுவினர் யாருமே வாய்திறக்கவே இல்லை. இந்நிலையில் முதல்முறையாக இப்படத்தின் இயக்குனர் விஷ்ணுவர்தன் படத்தின் முக்கிய அம்சங்கள் குறித்து விவரித்துள்ளார். அதன் விபரம் வருமாறு..

“ஆரம்பம்” என்ற தலைப்பு எல்லோரையும் கவர்ந்துள்ளது. இந்த தலைப்புக்கான தாமதம் திட்டமிடப்பட்டது அல்ல. ஆனால் இந்த வரவேற்பு கிடைக்க அந்த தாமதமும் ஒரு காரணம் என்பதும் மகிழ்ச்சிக்குரிய விஷயம்தான். இது ஒரு போராட்ட குணமுள்ள ஒரு தனி மனிதனின் கதை. கதையில் வரும் மற்ற கதாபாத்திரங்கள் அந்த பிரதான சூரியனை சுற்றி வரும் கோள்கள்தான்.

மங்காத்தா படத்தில் நடித்தது போன்றே இந்த படத்திலும் அஜீத் நரை கலந்த தலை முடியுடன்தான் நடிக்கிறார். மங்காத்தா படத்துக்கு முன்னரே அஜீத்திடம் என் படத்துக்கு இந்த கெட்டப்தான் வேண்டும் என்று கேட்டிருந்தேன் ஆனால் வெங்கட்பிரபு முந்திக் கொண்டார்.

இந்த ஸ்டைல் அவர் .அளவுக்கு வேறு யாருக்காவது அமைந்து இருக்குமா என்றால் சந்தேகமே. இது விறுவிறுப்பான வேகமான படம். எங்களது கூட்டணியில் உருவான பில்லா படத்தை விட பல மடங்கு வேகமாக இருக்கும். அஜீத் ரசிகர்களை மட்டுமின்றி எல்லா தரப்பு ரசிகர்களையும் கவரும் படமாக இருக்கும் என்பது நிச்சயம்.

இவ்வாறு விஷ்ணுவர்தன் கூறினார்