இரண்டரை வயது சிறுமியைக் கொடூரமாகத் தாக்கியவர் கைது!!

309

1 (39)

இரண்டு வயதும் ஆறு மாதங்களும் நிரம்பிய சிறுமியை கொடூரமாகத் தாக்கியதாகக் கூறப்படும், எளுவான்குளம் பகுதியைச் சேர்ந்த 22 வயதான ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரான கணவர் சிறுமியை பிரம்பால் கொடூரமாகத் தாக்கி, கடித்துள்ளதாக பெண்ணொருவரால் பொலிஸில் முறைப்பாடு முன்வைக்கப்பட்டது.

இதன்படி பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கைகளின் பிரகாரம் சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை சிறுமியின் உடலின் காயங்கள் மற்றும் கடித்த அடையாளங்கள் இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தனது மகளுக்கு சந்தேகநபர் ஏன் இவ்வாறான கொடுமையை இழைத்தார் என்பது தொடர்பில் அறிய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சிறுமி சிகிச்சைகளுக்காக புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அத்துடன் கைதுசெய்யப்பட்ட நபரை புத்தளம் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வனாதவில்லு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.