நாட்டில் சுமார் 30,000 தாதியர்கள் பற்றாக்குறை!!

337

BN

நாட்டில் தாதியர் பற்றாக்குறை நிலவுவதாக, ஊட்டச்சத்து மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார். 65,000 தாதியர்கள் வரை சுகாதார சேவைகளுக்கு தேவைப்படுவதாகவும் தற்போது 35,000 பேர் மட்டுமே உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்படி சுமார் 30,000 தாதியர்களுக்கு பற்றாக்குறை நிலவுவதாக அவர் கூறியுள்ளார். தாதியர் பயிற்சிக்காக 1100 மாணவர்களை இணைத்துக் கொள்ளும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் ராஜித்த சேனாரத்ன இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.