ராம்கியால் என் உயிருக்கு ஆபத்து- கல்லூரி மாணவி!!

443

Biryani7

தமிழ் சினிமாவில் 90களில் ஆக்‌ஷன் ஹீரோவாக வலம் வந்தவர் ராம்கி. இவர் நீண்ட இடைவேளைக்கு பிறகு பிரியாணி படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார்.இந்நிலையில் இவரின் மீது கல்லூரி மாணவி ஒருவர் ஈரோடு காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

இதில் ‘நடிகர் ராம்கி என் தாய் மாமா.நான் என் காதலரை திருமணம் செய்துக்கொண்டேன், இது என் குடும்பத்தினருக்கும், என் தாய்மாமா ராம்கி அவர்களுக்கும் பிடிக்கவில்லை.இதனால், எனக்கும், கணவர் உயிருக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இதற்கு எங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்’ என அந்த கல்லூரி மாணவி புகார் கொடுத்துள்ளார்.