வவுனியா கணேசபுரம் விநாயகர் வித்தியாலய புதிய கட்டடத் திறப்பு விழாஅதிபர் திரு.க.சிவநாதன் தலைமையில் நேற்று 26.01.2016 பாடசாலையில் நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக வவுனியா தெற்கு வலய வலயக்கவிக்கல்விப்பணிப்பாளர் திருமதி.S.அன்ரன்சோமராஜா அவர்களும் சிறப்பு விருந்தினராக வவுனியா தெற்கு கல்விவலயத்தின் முன்னாள் பொறியியலாளர் திரு.K.சிவகுமாரன் அவர்களும் கௌரவ விருந்தினராக Child fund நிறுவன திட்ட முகாமையாளர் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்வைச் சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில் Child fund நிறுவனத்தால் பாடசாலைக்கு புதிதாக அமைத்துக்கொடுத்த புதிய கட்டடத்தை வலயக்கல்விப்பணிப்பாளர் திரைநீக்கம் செய்தும் வகுப்பறைகளை நாடாவெட்டி திறந்தும் வைத்தார் .
படங்கள் :சுதன்