யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் பௌத்த விகாரை ஒன்றை அமைக்க வேண்டும் என்று கோரி, சுவரொட்டிகள் சில ஒட்டப்பட்டுள்ளன.
பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மரங்களில் இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பௌத்த மாணவர் ஒன்றியம் என்று அந்த சுவரொட்டிகளின் கீழ் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.