தற்கொலை செய்ய விபரீத செயலில் இறங்கிய 13 வயது சிறுமி: இறுதியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!!

274

israel_003

பாலஸ்தீனிய நாட்டில் தற்கொலை செய்ய முயன்ற 13 வயது சிறுமி ஒருவர் செய்த செயல் பெற்றோர் உள்ளிட்ட அந்நகர பொலிசார் மற்றும் பொதுமக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.பாலஸ்தீனியத்தில் உள்ள வெஸ்ட் பேங்க் பகுதியில் Roqaya Abu-Eid (13) என்ற சிறுமி பெற்றோர்களுடன் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த சனிக்கிழமை அன்று சிறுமிக்கும் அவரது பெற்றோருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.இதனால் மனம் உடைந்த அந்த சிறுமி தற்கொலை செய்துக்கொள்ள எண்ணி வீட்டில் இருந்த சமையல் கத்தியை எடுத்துக்கொண்டு வெளியே ஓடியுள்ளார்.

சிறிது தூரத்தில் பாதுகாப்பு பணியில் சில பொலிசார் ஈடுப்பட்டு இருந்துள்ளனர்.பொலிசாரை நோக்கி விரைந்து சென்ற சிறுமி, அங்குள்ள ஒரு பொலிசாரை கத்தியால் குத்த முயன்றதாக கூறப்படுகிறது.இதனை எதிர்க்கொள்ள முடியாமல் தன்னை காத்துக்கொள்வதற்காக அந்த பொலிசார் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டதில் சிறுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

வெளியே சென்ற மகளை தேடி பெற்றோர் பல இடங்களில் தேடியபோது, இந்த செய்தியை கேட்டு அலறியடித்து வந்துள்ளனர்.இந்த சம்பவம் குறித்து பேசிய பொலிசார் ஒருவர், ‘வீட்டில் குடும்ப பிரச்சனை காரணமாக சிறுமி தற்கொலைக்கு முயன்றுள்ளார். அதனை நிறைவேற்றிக்கொள்ள இச்செயலில் ஈடுப்பட்டுள்ளதாக’ தெரிவித்துள்ளார்.மருத்துவ பரிசோதனைக்கு பிறகு சடலத்தை மீட்ட பொலிசார் அதனை இறுதி சடங்கிற்காக பெற்றோர்களிடம் ஒப்படைத்துள்ளனர்.