குளிர்சாதனப்பெட்டியில் வைக்கக்கூடாத உணவுகள்!!

468

French-Door-Refrigerator-Open

குளிர்சாதனப்பெட்டியில் சில உணவுப் பொருட்கள் வைப்பதை தவிர்க்க வேண்டும். ஏனெனில், அந்த உணவுப்பொருட்கள் சில நேரங்களில் அழுகிவிடும் என்பதால் சமையலுக்கு பயன்படுத்த முடியாமல் போய்விடும்.

வெங்காயம்:- வெங்காயம் பொதுவாக காற்றோட்டமான சூழ்நிலையில் இருக்க வேண்டும். பாலீதீன் பையில் அடைத்து விற்கப்படும் வெங்காயத்தையும் நான் வாங்கி வீட்டுக்கு கொண்டு வந்த பிறகு அதனை காற்றோட்டமாக வைக்க வேண்டும்.

பூண்டு:- பூண்டை எப்போதுமே குளிர்சாதனப்பெட்டியில் வைக்கக் கூடாது. அப்படி வைத்தால் அது பூரணம் பிடிக்க ஆரம்பித்துவிடும். அதனை காற்றோட்டமான சூழலில் வைக்க வேண்டும். பூண்டுகளை வாங்கி வந்ததும், அதனை தனித்தனி பல்லாக பிரித்து எடுத்து வைக்கலாம்.

உருளைக் கிழங்கு:- உருளைக் கிழங்குகளில் பச்சை வேர்கள் மற்றும் பச்சை நிறம் இல்லாமல் பார்த்து வாங்க வேண்டும். காற்றோட்டமான சூழலில் வைக்க வேண்டும். பாலீதீன் பையில் வைக்கக் கூடாது.

தேன்:- உலகத்திலேயே கெட்டுப் போகாத உணவு பொருள் என்று ஒன்று உண்டு என்றால் அது தேன்தான். ஆனால், நாம் இப்போது கடைகளில் வாங்கப்படும் தேன், பல வித பொருட்கள் கலக்கப்பட்டு வருகிறது. எனினும், தேனை குளிர்சாதனப்பெட்டியில் வைத்து பராமரிக்கக் கூடாது.

வாழைப்பழம்:- வாழைப்பழத்தை குளிர்சாதனப்பெட்டியில் வைத்தால் அது விரைவில் கெட்டுப் போய் தோல் கருத்து விடும். எனவே வாழைப் பழத்தை வைக்காதீர்கள்.

முலாம்பழம்:- கடையில் இருந்து முழுதாக வாங்கி வந்த முலாம்பழத்தை குளிர்சாதனப்பெட்டியில் வைக்கக் கூடாது. அவ்வாறு வைத்தால், முலாம் பழத்தில் இருக்கும் சில சத்துக்களை பழம் இழந்து விடுகிறது. ஆனால், நறுக்கிய முலாம்பழத்தை டப்பாவிலோ பாலிதீன் பையிலோ போட்டு குளிர்சாதனப்பெட்டியில் வைக்கலாம். இதேபோல, அன்னாசி, கிவி பழம், பிலம் பழம், மாங்காய் போன்றவற்றையும் குளிர்சாதனப்பெட்டியில் வைக்கக் கூடாது.