ஜனாதிபதியின் அறிவுறுத்தலுக்கு அமைவாக ‘விளையாட்டின் மூலம் தேக ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன் தேசிய ஒற்றுமையையும் அபிவிருத்தியையும் கட்டி எழுப்புவோம்’ எனும் தொனிப்பொருளில் இன்று வவுனியாவில் சிவில் பாதுகாப்பு குழுவின் ஏற்பாட்டில் நடைபவனியும் உடற்பயிற்சியும் நடைபெற்றது.
வவுனியா கண்டி வீதியில் அமைந்துள்ள பொலிஸ் போக்குவரத்து பிரிவு தலைமை நிலையத்தின்முன் மதகுருமாரின் ஆசியுடன் ஆரம்பித்த நடைபவனி வவுனியா பேருந்து நிலையத்தினூடாக வவுனியா நகரசபை மைதானத்தை வந்தடைந்தது.
நிகழ்வில் வவுனியா, மன்னார், முல்லைத்தீவு மாவட்ட உதவிபொலிஸ் அத்தியட்சகர் மகிந்த ஏக்கநாயக்கா, வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் வசந்த விக்கிரமசிங்க, வவுனியா உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் பண்டார, ஓய்வுபெற்ற வடமாகாண விளையாட்டுத்துறை பணிப்பாளர் அண்ணாதுரை, வவுனியா பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி சண் அபேயவர்த்தன, சிவில் அமைப்புக்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள்,பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.